இந்தியாவின் ஆதித்தழிழன் நாட்டார் கலைகள் யாழ்ப்பாணத்தில் மாணவர்களிற்கு கற்பிக்கப்பட்டது என்பது அதிஸ்டவசமான ஒன்று.அம்மாணவர்களுள் நானும் ஒருவர் என கூறும்போது மகிழ்வுடன் பெருமையும் அடைகிறேன்.
கற்றதென்னவோ ஐந்து நாட்கள் தான்.ஆனால் மனதைவிட்டு நீங்காத நாட்கள் அவை. “ஐந்து நாட்களில் எம்மால் மேடையேற முடியுமா?” என நாம் சந்தேகத்தில் இருக்கும் போது கூட “முடியும்”என்ற நம்பிக்கையுடன் பழக்கியவர் எமது குரு “வேணு” எனும் வேணுகோபால்.
எனக்கு அவர் அறிமுகமானது சுவாரஸ்யமான அனுபவம்.
நான் உள்ளகப் பயிற்சிக்காக இந்தியா சென்றிருந்த வேளை யாழ்ப்பாண மாணவர்களிற்கான “புத்தாக்கப்பயிற்சி” ஒன்றை ஒழுங்கமைத்திருந்தனர்.அதன் முதல்நாள் வைபவம் இனிய நாட்டார் பாடலுடன் ஆரம்பமானது.



